நன்றி! நன்றி! நன்றி!

கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் எனது வணக்கங்கள். கிட்டத்தட்ட 11 மாதங்கள் எனது எண்ணங்களை வலைதளம் மூலம் தங்களிடம் பகிர்ந்து கொண்டேன். தாங்கள் அளித்த பேராதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். சிலர் வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தீர்கள், சிலர் பாராட்டினார்கள், ஒன்றிரண்டு பேர் வசைபாடினர். சிலர் கருத்துக்களுக்கு பதில் அளித்தேன், சிலருக்கு காலமே பதில் கொடுக்கும் என்று விட்டுவிட்டேன்! தற்போது இந்த வலை தள சேவையை தவிர்க்கமுடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளோம். காலம் கனிந்து வரும்போது மறுபடியும் சந்திப்போம்
நன்றி! வணக்கம்!